சென்னை 'பொது இடங்களில் நீராவி பிடிப்பதை தவிருங்கள்'!: பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்..!! May 17, 2021 அமைச்சர் மா சுப்பிரமணியம் சென்னை: பொது இடங்களில் மக்கள் நீராவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் 88 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா நோய் தடுப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை திறந்து வைத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒரே இடத்தில் பலர் ஆவி பிடிப்பதால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டார். எனவே பொது இடங்களில் மக்கள் நீராவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முகநூல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வருகிற புகைபோடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அழுத்தமான காற்று புகைபோடுதல் என்ற ஒன்று தற்போது பொதுமக்கள் இடையே பரவி வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் மூலம் நுரையீரலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். வாயை திறந்து புகையை பிடிக்கும் போது வைரஸ் கிருமியானது அருகில் உள்ளவர்களுக்கு மிக வேகமாக பரவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்தார். எனவே நோய் தொற்று ஏற்பட்டவுடன் பொதுமக்கள் தாங்களாகவே வீட்டு வைத்தியம் செய்வதை தவிர்த்து மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்தேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்: 2 மகன்களுடன் வீட்டைவிட்டு துரத்திவிட்டதாக குற்றச்சாட்டு
சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு; பிற மாநிலங்களில் இருந்து தகவல் கிடைத்ததும் முடிவு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
6 சட்டமன்ற தொகுதியிலும் எம்பி அலுவலகம் சோழிங்கநல்லூரில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்: தென் சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி
வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்ட பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும்: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி
வலது தொண்டை குருதிக்குழாயில் இளம்பெண்ணுக்கு புற்றுக்கட்டி வெற்றிகரமாக அகற்றம்: அப்போலோ மருத்துவமனை சாதனை
ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மனோவுக்கு பிரசாரம்: மேட்டுப்பாளையம் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி
நினைத்தது நடக்கவில்லை என்பதால் பழித்து பேசுகிறார் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அண்ணாமலை பொறுப்பில் இருப்பாரா என பார்ப்போம்: எடப்பாடி சொல்கிறார்
தேர்தல் பத்திரம் மூலம் பல கோடிகளை சுருட்டிவிட்டு ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜவிற்கு தகுதி கிடையது: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி
அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தினால் காலை 11 மணிக்கு முன்னர் தடுப்பூசி செலுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளரை ஆதரித்து தாம்பரம் மார்க்கெட் பகுதிகளில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பிரசாரம்