முக்கிய செய்தி இந்தியா மேற்கு வங்கத்தில் அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்!: முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள்...மம்தா பானர்ஜி ஆவேசம்..!! May 17, 2021 மேற்குக் கரை மம்தா பானர்ஜி கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நாரதா டேப் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 2 அமைச்சர்கள், எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் மேயரை சி.பி.ஐ. கைது செய்ததற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2016ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாரதா டேப் ஊழல் என்று கூறப்படும் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி தற்போது அமைச்சர்களாக பதவியேற்றுள்ள பிர்ஹத் ஹக்கீம், சுப்ரஜா முகர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா, முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி ஆகியோருக்கு சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது. இன்று காலையில் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு சென்ற நால்வரையும், விசாரணையின் முடிவில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, சி.பி.ஐ. அலுவலகத்திற்கு நேரில் சென்றதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. அமைச்சர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த மம்தா பானர்ஜி, முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள் என்று அதிகாரிகளிடம் ஆவேசமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 214 இடங்களை கைப்பற்றி மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக அரியணை ஏறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டியும் மோதல்களும் அரங்கேறின. இந்த நிலையில் தேர்தல் முடிந்த பின்னர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர்களை சி.பி.ஐ. கைது செய்திருப்பது மேற்கு வங்க அரசியலில் மீண்டும் பரபரப்பை கூட்டியுள்ளது.
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன்: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: 8 ஒன்றிய அமைச்சர், 2 மாஜி முதல்வர், 1 மாஜி ஆளுநரின் எதிர்காலம் என்னாகும்?
மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம் மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: ஓட்டுபோட்ட பின் செல்வப்பெருந்தகை பேட்டி
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவு; அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 26.58%
மக்களவை தேர்தல்; தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவு.! அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 15.10% பதிவு
நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில் மரியாதையும், கௌரவமும் இருக்கிறது: தனது வாக்கை நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 மக்களவை தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்..!
தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 1.50 லட்சம் போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்பு
நாளை நடக்கிறது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு; மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.! பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது: அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு