ஆவடி: அம்பத்தூர் மண்டலத்தில் 1.24 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ கூறினார். அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட அம்பத்தூர், கள்ளிக்குப்பம், பாடி, கொரட்டூர், முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ துவக்கிவைத்து பார்வையிட்டார். இதன்பின்னர் எம்எல்ஏ கூறியதாவது; அம்பத்தூர் மண்டலத்தில் தினசரி 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 1 லட்சத்து 24 ஆயிரத்து 997 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. முதல் தவணையாக 79 ஆயிரத்து 698 பேருக்கும் 2ம்தவணையாக 33ஆயிரத்து, 548 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.