சென்னை வேகமெடுக்கும் கொரோனா தொற்று!: சென்னையில் விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி..மாநகராட்சி அறிவிப்பு..!! May 17, 2021 சென்னை சென்னை: சென்னை நகரில் தடுப்பூசி செலுத்துவதற்கு விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றின் வீக்கம் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தாக்கத்தின் வீரியத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொற்றானது குறைந்தபாடில்லை. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படுகின்றனர். நோயாளிகள் அதிகரிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில், தடுப்பூசிக்கு விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் குடியிருப்போர் விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் 30 வயதுக்கு மேல் இருந்தால் அந்தந்த நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கே வந்து சிறப்பு முகாம் போடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிப்போர் மற்றும் நிறுவனங்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் மண்டலம், வார்டு குறித்த விவரங்களுடன் இணையத்தில் மாநகராட்சிக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது மாநகராட்சி மண்டல அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்தேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்: 2 மகன்களுடன் வீட்டைவிட்டு துரத்திவிட்டதாக குற்றச்சாட்டு
சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு; பிற மாநிலங்களில் இருந்து தகவல் கிடைத்ததும் முடிவு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
6 சட்டமன்ற தொகுதியிலும் எம்பி அலுவலகம் சோழிங்கநல்லூரில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்: தென் சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி
வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்ட பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும்: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி
வலது தொண்டை குருதிக்குழாயில் இளம்பெண்ணுக்கு புற்றுக்கட்டி வெற்றிகரமாக அகற்றம்: அப்போலோ மருத்துவமனை சாதனை
ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மனோவுக்கு பிரசாரம்: மேட்டுப்பாளையம் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி
நினைத்தது நடக்கவில்லை என்பதால் பழித்து பேசுகிறார் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அண்ணாமலை பொறுப்பில் இருப்பாரா என பார்ப்போம்: எடப்பாடி சொல்கிறார்
தேர்தல் பத்திரம் மூலம் பல கோடிகளை சுருட்டிவிட்டு ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜவிற்கு தகுதி கிடையது: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி
அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தினால் காலை 11 மணிக்கு முன்னர் தடுப்பூசி செலுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளரை ஆதரித்து தாம்பரம் மார்க்கெட் பகுதிகளில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பிரசாரம்