மழையால் சிம்ஸ் பூங்காவில் பூக்கள் அழுகுகின்றன

குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுலா தலமான சிம்ஸ் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜனவரி முதல் வாரத்தில் கோடை சீசனுக்கு சுமார் 3.10 லட்சம் பல்வேறு மலர் நாற்றுகள் மற்றும் விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பூங்காவில் உள்ள மலர்கள் அனைத்தும் பூக்க துவங்கியுள்ளன.

ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வந்து செல்லும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா பயணிகள் வர தடை உத்தரவு அமலில் உள்ளதால் பூங்கா பொலிவிழந்து காணப்பட்டுவந்தது‌. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்கள் அனைத்தும் அழுக துவங்கியுள்ளன. பல மாதங்கள் சிரமம் அடைந்து பூக்களை பராமரித்து தற்போது யாரும் பார்க்க முடியாமல் அழுகி போவதை கண்டு பூங்கா ஊழியர்கள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: