முக்கிய செய்தி வர்த்தகம் கிறுகிறுக்க வைக்கும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு..நகை பிரியர்கள் கலக்கம்..!! May 17, 2021 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது. இந்த வருட தொடக்கம் முதலே தங்கத்தின் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. தங்கம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் கூட தங்கம் விலை உயர்த்தப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் தொடக்க நாளான இன்று சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.32 உயர்ந்து ரூ.4,552-ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ.36,416க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமிற்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.76.60-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.600 உயர்ந்து ரூ. 76,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு; வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு மனுக்கள் பரிசீலனை: முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: மொத்தம்- 1,749; நிராகரிப்பு -664; ஏற்பு-1085.! நாளை இறுதி பட்டியல் வெளியீடு
கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து: ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம்
சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000 அதிகரிக்கும்… சுங்க கட்டணம் உயர்வால் லாரிகளுக்கு கூடுதல் செலவு: திரும்பப்பெற உரிமையாளர்கள் வலியுறுத்தல்
நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம்… பாஜக தலைவர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!!
DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி : உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு: மனுக்களை வாபஸ் வாங்க இரண்டு நாட்கள் கெடு
“ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி”.. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!
மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் ; 10,92,420 வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிப்பு!!
டெல்லி முதல்வரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட முடியாது.. கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி..!!