கிறுகிறுக்க வைக்கும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு..நகை பிரியர்கள் கலக்கம்..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது. இந்த வருட தொடக்கம் முதலே தங்கத்தின் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. தங்கம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் கூட தங்கம் விலை உயர்த்தப்படுகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் தொடக்க நாளான இன்று சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.32 உயர்ந்து ரூ.4,552-ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ.36,416க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமிற்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.76.60-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.600 உயர்ந்து ரூ. 76,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: