காசா: காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் 3 கட்டிடங்கள் தரைமட்டமாகின. பலி எண்ணிக்கை 181 ஆக அதிகரித்தது.காசா போர் முனையில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடந்து வருகிறது. இதுவரை காசாவில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புக்கள் இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் அமெரிக்க செய்தி நிறுவனம், அல் ஜசீரா தொலைக்காட்சிமற்றும் இதர செய்தி நிறுவனத்தின் அலுவலகங்கள் இயங்கி வந்த கட்டிடமும் குறிவைத்து தாக்கப்பட்டது. முன்னதாக அங்கிருக்கும் ஊழியர்களை வெளியேற்றும்படி ராணுவம் எச்சரித்துள்ளது. இதன் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.