திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள கீரித்தோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சவுமியா (36). இவர் இஸ்ரேலில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 11ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் குண்டு வீச்சில் நர்ஸ் சவுமியா உட்பட ஏராளமானோர் பலியானார்கள். இஸ்ரேலிய அரசு சவுமியாவின் உடலை தனி விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைத்தது. நேற்று முன்தினம் அதிகாலை அவரது உடல் டெல்லி வந்தது.