சென்னை: ஆகமப் பயிற்சி பெற்று அரசு நியமித்த பள்ளிகளிலிருந்து பட்டம் பெற்று காத்திருப்போரை அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில் அர்ச்சகர்களாக (ஆகமப் பயிற்சி பெற்று அரசு நியமித்த பள்ளிகளிலிருந்து பட்டயம் பெற்ற 205 அனைத்து ஜாதியினர்) ஆவதற்குத் தகுதி உடையவர்களாக அறிவிக்க” 2006ல் ஆட்சிக்கு வந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்ட நாள்.