அதிமுக செயலாளர்கள் கொரோனாவுக்கு மரணம்: இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்

சென்னை: அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா, கடலூர் மாவட்டம் விருதாசலம் ஒன்றிய செயலாளர் பொன்.பாலதண்டாயுதம் ஆகியோர் கொரோனா தொற்றால் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு  மிகுந்த வருத்தமுற்றோம். அதேபோல், அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் பாண்டுரங்கன் மூத்த சகோதரர் பி.கே.சந்தானம் கொரோனா தொற்றால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். குடும்பத்தினருக்கு எங்களது ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Stories: