முகக்கவசம் அணியாமல் 38 நாட்களில் வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் ரூ.19.24 கோடி பொதுமக்களிடம் அபராதம் வசூல்: காவல் துறை நடவடிக்கை

சென்னை: முழு ஊரடங்கிலும் நோய் தொற்றும் பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் தமிழகம் முழுவதும் கடந்த 38 நாட்களில் வெளியே சுற்றியதாக ரூ.19.24 கோடி அபராதமாக பொதுமக்களிடம் போலீசார் வசூலித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி  கடைப்பிடிக்காத நபர்கள் மீது தமிழகம் காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஆதாவது 38  நாட்களில் வடக்கு மண்டலத்தில் 1,76,113 பேர் மீதும், மத்திய மண்டலத்தில் 1,29,746 பேர் மீதும், மேற்கு மண்டலத்தில் 1,58,144 பேர் மீதும், தெற்கு மண்டலத்தில் 3,23,079 பேர் மீதும், நகர் புறங்களில் 1,75,051 பேர் என மொத்தம் 9,62,133 பேர்  மீது தமிழக காவல் துறை வழக்கு பதிவு ெசய்துள்ளனர். மேலும் அவர்களிடம் அபராதமாக ரூ.19 கோடியே 24 லட்சத்து 26 ஆயிரத்து 600 வசூலித்துள்ளனர்.

அதேபோல், தமிழகம் முழுவதும் சமூக இடைவெளி கடைப்படிக்காத நபர்கள் மீது கடந்த 38 நாட்களில் மட்டும் 33,566 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.1 கோடியை 67 லட்சத்து 83 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை முழு ஊரடங்கிலும் தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: