சென்னை: கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கும், இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கும் தமிழ்நாடு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவை உள்ளது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு உதவிட முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.