மணலி மண்டலத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருவொற்றியூர்: மணலி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும்  கொரோனா தடுப்பூசி முகாம் மாத்தூர் எம்எம்டிஏ இரண்டாவது பிரதான சாலையில்  உள்ள எவர்வின் தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் மண்டல உதவி ஆணையர் சசிகலா தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார்.

சென்னை வட கிழக்கு  மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தடுப்பூசி போடும் பணியை துவக்கி  வைத்தார். அதனைத் தொடர்ந்து 20வது வார்டுக்குட்பட்ட சீனிவாச பெருமாள் கோயில் தெருவில் நடைபெற்ற முகாமில், கே.பி.சங்கர் எம்எல்ஏ முன் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசியை போடும் பணியை  துவக்கி  வைத்தார். மாலை வரை நடைபெற்ற முகாமில் மண்டலம் முழுவதும் சுமார் 600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Related Stories: