பெரம்பூர்: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை குறைக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 73வது வார்டு செயற்பொறியாளர் சரவணன் தலைமையில் உதவி பொறியாளர் குமரவேல் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர நீர் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினர். மேலும், கொரோனா குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.