சிரமமின்றி தடுப்பூசி போட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு: அரசு அறிவிப்பு

சென்னை: மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தனி வரிசை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

* அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்.

* அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும்.

* அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும்.

* தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்க வேண்டும்.

Related Stories: