ரூ.1,100 கோடி செலவில் 59 அணைகள் புனரமைப்பு: தமிழக அரசிடம் நிதி கேட்டு பொதுப்பணித்துறை கடிதம்

சென்னை: தமிழகத்தில் 120க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இதில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 90 அணைகள் அடக்கம். இந்த அணைகள் பல ஆண்டுகளாக முறையாக புனரமைக்கப்படாததால், மறு கட்டுமானம் செய்ய  வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹748 கோடி செலவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 69 அணைகள், மின்வாரியம் கட்டுப்பாட்டில்  உள்ள 38 அணைகளை புனரமைக்க கடந்த 2012ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இப்பணி 7 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டன. ஆனால், இப்பணிக்கு முழுமையான அறிக்கை தயார் செய்து டெண்டர் விடுவதற்கு ஏற்பட்ட காலதாமதத்தால் இப்பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஒன்றரை ஆண்டுகள்  கால அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில் தற்போது பொதுப்பணித்துறையில் 69 அணையில் 68 அணைகளில் பணிகளும், மின்வாரியத்தில் 20 அணையில் 18 அணைகளில் மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 3 அணைகளில் புனரமைப்பு பணி கைவிடப்பட்டது. இந்த  திட்டத்தை முடிப்பதில் காலதாமதம் ஆன நிலையில் ₹830 கோடி திட்டமதிப்பீடு செலவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த மார்ச் 31ம் தேதி அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டப்பணிகளுக்கு ரூ.250 கோடி தரக்கோரி தமிழக அரசு  கடிதம் எழுதியுள்ளது.

 

இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹1100 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமூர்த்தி, வைகை, மேட்டூர் உடப்ட 37 அணைகள், மின்வாரியம் கட்டுபாட்டில்   உள்ள சேர்வலாறு அணை, கடம்பாறை அணை உட்பட 22 அணைகளில் புனரமைப்பு பணி மேற்கொள்ள உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், தமிழக அரசு சார்பில்  இரண்டாவது  கட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன்பிறகே பொதுப்பணித்துறை சார்பில் டென்டர் விட்டு பணிகளை தொடங்க முடியும்.  அதன்பிறகே மத்திய அரசின் நிதி தமிழக அரசுக்கு கிடைக்கும். எனவே, பொதுப்பணித்துறை சார்பில்  நிதியை விடுவிக்க கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இப்பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்த பிறகு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இந்த திட்டப்பணிகளை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: