மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயனம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, இ-பதிவு செய்தால் போதும்: தமிழக அரசு

சென்னை: வரும் மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலுமான போக்குவரத்துக்கு இ பாஸ் தேவையில்லை என்றும், இ ரிஜிஸ்டர் வேறு, இ பாஸ் வேறு என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு நேற்று இரவு மீண்டும் வெளியிட்ட அறிவிப்பில்,  மாவட்டங்களுக்கு இடையில் மாவட்டங்களுக்குள் பயணிக்க இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று தவறுதலாக செய்தி பரப்பப்படுகிறது. மாறாக மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு பயணம் செய்ய இ-பதிவு மட்டும் செய்தால் போதும் என கூறியுள்ளது.

பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது என்று அந்த விளக்கத்தில் அரசு தெரிவித்துள்ளது. அதாவது இ பாஸ் என்றால் இணையத்தில் விண்ணப்பித்து அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும், ஆனால், இ பதிவு என்றால் இணையத்தில் பதிவு செய்து அதன் ஆவணத்தை வைத்திருந்தாலே போதும். அரசின் ஒப்புதல் பெற தேவையில்லை என்பதுதான் இந்த அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

Related Stories: