சென்னை கொரோனா வீட்டு தனிமையில் உள்ளவர்களை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்!: நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல்..!! May 16, 2021 கொரோனா ஸ்டாலின் சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட நடுக்குப்பம், செல்லம்மாள் தோட்டம், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் வீதி வீதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இலவச தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அவர், அதனை தொடர்ந்து வீடு வீடாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். தற்போது பாதிப்பு அதிகமாக இருப்பதால் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களை நேரில் சந்தித்த உதயநிதி, அவர்களிடம் நலம் விசாரித்தார். அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார். தொடர்ந்து ராயப்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், அடிப்படை வசதிகள் உட்பட பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு தேவையான அரசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை நேரடியாக சென்று வழங்கினார்.
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்
இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்