உலகம் மோதல் உச்சகட்டம்!: பாலஸ்தீனத்தில் உள்ள மேலும் ஒரு 13 மாடி கட்டிடத்தை ராக்கெட் வீசி தகர்த்த இஸ்ரேல்..!! May 16, 2021 பாலஸ்தீனம் இஸ்ரேல் காசா: பாலஸ்தீனத்தில் உள்ள மேலும் ஒரு 13 மாடி கட்டிடத்தை இஸ்ரேல் ராக்கெட் வீசி தகர்த்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல செய்தி நிறுவனங்களின் அலுவலகங்கள் இயங்கி வந்தன. பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. ஏவுகணைகளை கொண்டு பாலஸ்தீனத்தில் உள்ள பல கட்டிடங்களை இஸ்ரேல் தகர்த்து வருகிறது. கடந்த 1 வாரத்தில் மட்டும் 4 கட்டிடங்கள் தகர்த்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் காசாவில் அமைந்திருக்கும் 13 மாடி கட்டிடத்தை இஸ்ரேல் படையினர் குறிவைத்து தாக்கியுள்ளனர். இந்த கட்டிடத்தில் சர்வதேச ஊடகங்களான அல் ஜோசிரா, அசோசியேட் பிரஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 145 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 41 குழந்தைகளும், 23 பெண்களும் உயிரிழந்திருக்கிறார்கள். இதனிடையே காசாவில் செய்தி நிறுவனங்களின் அலுவலகங்கள் தகர்த்தப்பட்டதாக வெளியான தகவலை இஸ்ரேல் மறுத்துவிட்டது. நேற்றைய தினம் தகர்க்கப்பட்ட 13 மாடி கட்டிடம் ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்தி வந்தது என்றும் உறுதியான தகவலை அடுத்தே கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நிதின் யாகுவிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே அமைதி திரும்ப வேண்டும் என்றும் அதேபோன்று செய்தியாளர்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோன்று பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் உடனும் ஜோ பைடன் பேசியுள்ளார். இரு நாடுகளின் அமைதிக்கு உதவுவதாகவும் ஜோ பைடன் உறுதி அளித்திருக்கிறார்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்