இந்தியா உ.பி. மயானத்தில் கும்பல் கும்பலாக எரிக்கப்படும் கொரோனா சடலங்கள்!: பார்ப்பவர்களை பதறவைக்கும் அதிர்ச்சி காட்சி வெளியீடு..!! May 16, 2021 கொரோனா லக்னோ: உத்திரபிரதேசம் மாநிலம் மயானம் ஒன்றில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் கும்பல் கும்பலாக எரிக்கப்படும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. தேசிய விருதுப்பெற்ற திரைப்பட இயக்குனரும், பத்திரிகையாளருமான வினோத் கபிரி, தனது ட்விட்டர் பக்கத்தில் உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரில் உள்ள மயானம் ஒன்றில் ஏராளமான சடலங்கள் எரியூட்டப்படும் காட்சிகளை வெளியிட்டுள்ளார். கொரோனாவால் உயிரிழக்கும் லட்சக்கணக்கானோருக்கு யாரும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் வினோத் கபிரி வெளியிட்ட வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ், அதிர்ச்சி தரும் இந்த காட்சிகளை பார்க்கும் போதே கண்ணீர் வருவதாக குறிப்பிட்டுள்ளார். உத்திரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு கூறி வரும் நிலையில், சடலங்கள் மொத்தமாக எரியூட்டப்படும் காட்சிகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனப்படுகொலை காலத்துக்கு நிகராக உத்திரப்பிரதேசத்தில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பின் உண்மையான நிலவரத்தை உத்திரபிரதேச பாஜக அரசு மறைப்பதாகவும் நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு
ராகுல் தொகுதியில் புகுந்த மாவோயிஸ்டுகள் மக்கள் யுத்த கெரில்லா படையைச் சேர்ந்தவர்கள்: போலீசார் தீவிர கண்காணிப்பு
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!
சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா கூட்டணிகள் கட்சிகள் பங்கேற்பு..சமூக நீதிக்கான குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது: வில்சன்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு