சென்னை: தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும். மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.