சென்னை தீவிரமடையும் கொல்லுயிரி!: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! May 16, 2021 முதல் அமைச்சர் எம்.கே. ஸ்டாலின் சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கும், கொரோனா பரவலை குறைப்பதற்குமான நடவடிக்கையாக ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கான செயல்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த அடிப்படையில் இன்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு முறையான உதவிகள் செய்யப்படுகின்றனவா? ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தங்கு தடையின்றி ஆக்சிஜன்கள் சென்று சேர்கிறதா? அதேநேரத்தில் கட்டண மையங்களில் நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு எவ்வித உதவிகள் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை தமிழக முதல்வர் ஆலோசித்து வருகிறார். அதேநேரத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக உலகளாவிய டெண்டர் விடப்பட்டது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் சாதாரண படுக்கை வசதி, ஆக்சிஜன் படுக்கை வசதி, ஐ.சி.யூ போன்ற வார்டுகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்
இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்