இந்தியா கொரோனா நோயாளிக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிட மத்திய அரசு முடிவு!: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்..!! May 16, 2021 டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவின் வைரஸை போராடி அழிக்கும் நோய் எதிர்ப்பு அணுக்கள் உருவாகியிருக்கும். அவற்றை பிரித்தெடுத்து கொரோனா பாதித்தவர்களின் உடலில் செலுத்தும் போது மேற்கொண்டு வைரஸ் பரவாமல் தடுக்கும். இந்த பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்காக கொரோனாவில் இருந்து குணமடைந்த பலர் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்து வருகின்றனர். கொரோனா முதல் அலை பரவலின் போது பலருக்கும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பிளாஸ்மா தெரபி சிகிச்சை பயனுள்ளதாக உள்ளதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வைரஸ் பாதிப்பில் இருந்து மீட்பதிலோ அல்லது உயிரிழப்பை கட்டுப்படுத்துவதிலோ பிளாஸ்மா சிகிச்சையால் எந்த பயனும் இல்லை என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிளாஸ்மா சிகிச்சையை கைவிட ஐ.சி.எம்.ஆர். முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் காதலியுடன் தாய்லாந்தில் பதுங்கியிருந்த பிரபல தாதா கைது
ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி போராட்டம்: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம்
கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!!
வயநாடு தொகுதி மக்களை துப்பாக்கிகளுடன் மிரட்டிய மாவேயிஸ்ட்டுகள்: தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
லாபத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டனர்!: மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!
பிரதமர் மோடியின் நண்பர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டு 90% மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்காந்தி வாக்குறுதி