முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஒரு வருடம் ஆனாலும்கூட 2வது டோஸ் போடலாம்'; நிபுணர்கள் தகவல்

மும்பை: ‘தடுப்பூசியின் 2வது டோஸ் வழக்கமாக 4 வாரத்திற்குப் பிறகு போட்டுக் கொள்ளலாம், கிடைக்காத பட்சத்தில் ஓராண்டு வரை கூட ஒத்தி போடலாம்’ என முன்னணி வைரலாஜிஸ்ட்கள் கூறி உள்ளனர். கோவாக்சின் தடுப்பூசியின் 2வது டோஸ் 4 வார இடைவெளியில் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் 12-16 வார இடைவெளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பலருக்கும் 2வது டோஸ் தடுப்பூசி எடுப்பதில் குழப்பநிலை ஏற்படுகிறது. இதுகுறித்து முன்னணி வைரலாஜிஸ்ட்கள் கூறியதாவது: நான்கு வார இடைவெளியில் 2வது டோஸ் தடுப்பூசி போடுவதன் மூலம், கடுமையான வைரஸ் பாதிப்பிலிருந்து 100% சதவீதம் பாதுகாப்பளிக்கும். ஆனால், குறைவான, நடுத்தரமான கொரோனா பாதிப்பிலிருந்து 100% நம்மை காக்காது. அதனால்தான் தடுப்பூசி போட்டாலும், லேசான அறிகுறிகளுடன் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் 12 வார இடைவெளி தரப்படுகிறது.

12 வாரத்திற்கு பிறகு 2வது டோஸ் போடும் போது லேசான பாதிப்பிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். தடுப்பூசி 2வது டோஸ் பொறுத்த வரை ஓராண்டு வரை காத்திருக்கலாம். 4 வார இடைவெளி என்பது பொதுவானது. கிடைக்காத பட்சத்தில் ஓராண்டு வரை கூட காத்திருக்கலாம். அதன் பாதுகாக்கும் திறன் அப்படியே இருக்கும். எனவே முதல் டோஸ் போட்டு ஓராண்டு ஆனாலும் கூட 2வது டோஸ் போடலாம். மீண்டும் முதல் டோஸ் போட வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஓராண்டுக்கு தாண்டியும் முதல் டோஸ் வீரியமாக இருக்குமா என்பதற்கான ஆய்வு தரவுகள் இல்லை.

Related Stories: