போபால்: மத்தியப்பிரதேசத்தில் போலி ரெட்டெசிவிர் மருந்து எடுத்துக்கொண்ட 90 சதவீத கொரோனா நோயாளிகள் உயிர் பிழைத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. குஜராத்தில் போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பது கடந்த ஒன்றாம் தேதி கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து போலி மருந்து தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பல் மொத்தம் 1200 போலி ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்திருந்தது. இதில் 700 பாட்டில்கள் இந்தூரிலும், ஜபல்பூரில் 500 பாட்டில்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. மும்பையில் இருந்து காலி பாட்டில்கள் வரவழைக்கப்பட்டு தொழிற்சாலை ஒன்றில் குளுக்கோஸ் உப்பு கலந்த நீர் நிரப்பப்பட்டு ரெம்டெசிவிர் என விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றது.