அமெரிக்காவில் தடுப்பூசி போட்டால் 7 கோடி பரிசு

ஓஹியோ:  அமெரிக்காவின்  சில மாகாணங்களில்  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஓஹியோ மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் மாகாண ஆளுநர் மைக் டிவைன் தனது டிவிட்டர் பதிவில், ’தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களில் வாரத்துக்கு ஒரு முறை 5 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.7 கோடி பரிசாக வழங்கப்படும்’  என குறிப்பிட்டுள்ளார். ‘‘இவ்வாறு பரிசளிப்பது வீண் விரயத்தை ஏற்படுத்தலாம் என சிலர்  நினைக்ககூடும், ஆனால்  தடுப்பூசி இருக்கும் போது அதனை பயன்படுத்தாமல் இருப்பதுதான் உண்மையான விரயமாகும். உயிரிழப்புகளை தடுக்கவே இந்த சலுகையை அறிவித்துள்ளேன்’’ என்றும் டிவைன் கூறியுள்ளார்.

Related Stories: