கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவம், கல்வி உதவியாக 8 பேருக்கு தலா 25 ஆயிரம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய நலிந்தோர்க்கு மருத்துவம் மற்றும் கல்வி நிதி உதவியாக 8 பேருக்கு தலா 25 ஆயிரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து, திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக,  கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த 5 கோடி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.  2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி 5 கோடியே 27 லட்சத்து 90 ஆயிரம். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2021, ஏப்ரல் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா  25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சம் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: