சென்னை: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஷேக் தாவுத் வெளியிட்ட அறிக்கை: எங்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியத்துடன் இணைந்துள்ளது. தமிழக மக்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்ற அரசு எடுக்கும் துரித நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் ஒருநாள் ஊதியம் மற்றும் எங்கள் சங்க மாநில செய்தி தொடர்பாளர் அருள்ராஜ் ஒருமாத ஊதியத்தை முதல்வரின் பொது கொரோனா நிவாரணமாக வழங்கிட இசைவு தெரிவித்துள்ளனர். எனவே, மே 2021ம் மாத சம்பளத்தை பிடித்து செய்ய அரசாணை பிறப்பித்து உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.