தெற்கு ரயில்வே அறிவிப்பு: மேட்டுப்பாளையம், திருச்செந்தூர் செல்லும் 8 தினசரி சிறப்பு ரயில்கள் ரத்து

சென்னை: பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், 8 தினசரி சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்து இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், 8 தினசரி சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. வரும் 17ம் தேதி (நாளை) முதல் 31ம் தேதி வரை புனலூர்-குருவாயூர்; குருவாயூர்-புனலூர்; குருவாயூர்-திருவணந்தபுரம்; திருவணந்தபுரம்-குருவாயூர்; சென்னை எழும்பூர்-திருச்செந்தூர்; சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் ஆகிய தினசரி சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் 18ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரையில் திருச்செந்தூர்-சென்னை; மேட்டுப்பாளையம்-சென்ட்ரல் ஆகிய ரயில்கள் என மொத்தம் 8 தினசரி சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது’ எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories: