புதுடெல்லி: கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனை இந்திய வகை இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் குறைப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக இரட்டை உருமாற்ற வகை கொரோனா வைரஸ் கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டது. இந்தியாவில் 2வது அலை மிக மோசமாக இந்த வகை வைரசே காரணம் என கருதப்படுகிறது. இது தற்போது 44 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. மிகத் தீவிரமாக பரவும் வீரியமிக்க இந்த வைரஸ், தடுப்பூசிகளின் செயல்திறனையும் குறைப்பதாக ஆய்வாளர்கள் தற்போது கூறி உள்ளனர். இந்தியாவில் காணப்படும் உருமாறிய பி.1.617 வகை கொரோனா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு வேகமாக பரவக்கூடியது என்று உலீக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட ஆய்வுகளில் பி.1.617.1 மற்றும் பி1.617.2 ஆகியவை கணிசமாக அதிக பரவல் விகிதத்தைக் கொண்டிருப்பதைக் காட்டுவதாகவும், பைசர், மாடர்னா போன்ற தடுப்பூசிகளின் செயல்திறனையும் இது குறைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.