×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில்  22,517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 14 லட்சத்து 11 ஆயிரத்து 320-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9271-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 11 லட்சத்து 94 ஆயிரத்து 582 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,07,467 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Andra , In Andhra Pradesh, 22,517 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டி...