டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்த வெண்டிலேட்டர்கள் செயல்பாடு மற்றும் பயன்பாடு குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என பிரமதர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், உள்ளூர் அளவில் கட்டுப்பாட்டு திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். கொரோனாவின் இரண்டாவதுஅலை கிராமப்புறங்கள் வரை பரவி உள்ளது. இதனால், அங்கும் ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் செறிவூட்டிகளை விநியோகிக்க வேண்டும்.