தமிழகம் தஞ்சையில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை: கணவரிடம் விசாரணை May 15, 2021 டாங்கியம் தஞ்சை: தஞ்சையில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிரியாவுக்கு தஞ்சை ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை கிடைத்தது. இதற்காக பிரியா தனது கணவர் வினோத்குமார் மற்றும் குழந்தையுடன் தஞ்சை தமிழ்பல்கலை கழகம் எதிரே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். இதற்கிடையே கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் வினோத்குமார் குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்றார். பிரியா மட்டும் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று வினோத்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பிரியா பேசினார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரியா செல்போன் இணைப்பை துண்டித்து விட்டு வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தமிழ்பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு