இந்தியா தமிழகத்தில் கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது: மத்திய சுகாதாரத்துறை May 15, 2021 கொரோனா தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மத்திய சுகாதாரத் துறை டெல்லி: தமிழகத்தில் கடந்த வாரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவில் 11 மாநிலங்களில் ஒரு லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 8 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். 17 மாநிலங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர் மாநிலங்களில் அதிகளவு பாதிப்பு பதிவானது. தற்போது, அங்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கவலை அளித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசின் கூட்டு முயற்சி பலன் அளித்து வருகிறது என கூறியுள்ளது.
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை புகார்
மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யாமல் 180 இடங்களை பாஜக தாண்டாது: பிரியங்கா காந்தி திட்டவட்டம்
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரம்: தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம் மக்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுப்பர்: டெல்லி அமைச்சர் கோபால் ராய் சாடல்
ராம நவமி நாளில் அயோத்தி ராமரின் நெற்றியில் விழுந்த சூரிய கதிர்கள் திலகம்: டேப்லெட்டில் தரிசித்தார் பிரதமர் மோடி