லண்டன்: இந்திய உருமாறிய கொரோனாவால் பிரிட்டனில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள B1617 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் உலக அளவில் 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தப்படியாக இந்த வைரஸ் பிரிட்டனில் தான் இந்த வைரஸ் அதிகமாக காணப்படுவதால் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள கடந்த மாதம் பிரிட்டன் தடை விதித்தது. கடந்த ஒரு வாரத்தில் அங்கு இந்திய உருமாறிய கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 1,313 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இதனால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.