முக்கிய செய்தி இந்தியா டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது: அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் May 15, 2021 தில்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தற்போது முழு ஊரடங்கு காரணமாக, டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கொரோனா பாசிட்டிவ் விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது. டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும், மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில், கடந்த 24 மணி நேரத்தில், 6,500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது. வெறும் 15 நாட்களில், 1,000 ஐ.சி.யு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது, டெல்லி மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் முயற்சியால் சாத்தியப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லி மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். டெல்லியில், இன்று முதல் ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் ஆக்சிஜனை வழங்க முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, இரண்டு மணி நேரத்தில் வீடு தேடி சென்று ஆக்சிஜன் சப்ளை செய்யப்படும் என கூறினார்.
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி பொதுமக்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு !
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்
கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் பக்தர்களின் ஆரவாரத்துடன் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு பேச்சு; மோடிக்கு எதிராக குவியும் கண்டனங்கள்.! மக்களை திசைதிருப்ப தரம் தாழ்ந்து பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு உள்பட 20 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு
எல்லா நோய்களுக்கும் சிகிச்சை பெறமுடியும்; மருத்துவ காப்பீட்டில் வயது வரம்பு நீக்கம்: புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் விதிகள் அறிவிப்பு