வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன மோட்டூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சஞ்சீவி (18), சென்னையில் தங்கியிருந்து தனியார் கேட்டரிங் சென்டரில் 2ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் நேற்று அதே கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் ஏர் உழுவதற்கு, சஞ்சீவியின் சித்தப்பா சவுந்தரராஜன் சென்றார். அப்போது சஞ்சீவியும் அவருடன் சென்றிருந்தார். உணவு அருந்துவதற்காக டிராக்டரை நிறுத்திவிட்டு சவுந்தரராஜன் சென்றபோது, டிராக்டரில் ஏறிய சஞ்சீவி தனது செல்போனில் செல்பி எடுத்து, ‘டுடே டிரைவிங்’ என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தார்.