திண்டுக்கல்: தமிழகத்தில் 2ம் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு, போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், மக்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல், ஊரடங்கிலும் உல்லாசமாக, அவசிமின்றி டூவீலர், கார் என ஊர் சுற்றித்திரிகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரடங்கு விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காமல், தேவையில்லாமல் ஏராளமானோர் பொதுவெளியில் சுற்றித் திரிகின்றனர்.