தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் 24 மணி நேரத்தில்  4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாலட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது. இந்த சூழலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக உருவானது. கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டவ் தே புயல் காரணமாக, கேரளா, கர்நாடகம், தமிழகம், மராட்டியம், கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

Related Stories: