உ.பி .சிறையில் துப்பாக்கி சண்டை 3 கைதிகள் சுட்டுக் கொலை

சித்ரகூட்:  உத்தரப்பிரதேசத்தில் சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 கைதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  உத்தரப்பிரதேசத்தில் ராகவ்லி மாவட்ட சிறையில் நேற்று கைதிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்த சிறை அதிகாரிகள் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது அவர்களிடம்  இருந்த துப்பாக்கியை பறித்து சுட்டத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்தனர். தொடர்ந்து சிறை அதிகாரிகள் நடத்திய அதிரடியில் அந்த கைதியும் சுட்டுக்கொல்லப்பட்டார். கைதிகள் மோதல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: