காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தாக்குதல்கள் நடத்தப்படாது என அறிவித்திருந்தனர். இந்நிலையில் ரம்ஜானைத் தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று தலைநகர் காபூல் மசூதியில் தொழுகைக்காக ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அப்போது திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி இமாம் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.