அரபிக்கடலில் உருவான புயலால் கேரளாவில் கனமழை

திருவனந்தபுரம்: அரபிக்கடலில்  லட்சத்தீவுக்கு அருகே நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி மிகத்தீவிர தாழ்வு மண்டலமாக மாறியது. இதையடுத்து கேரளாவில் பலத்த காற்றுடன் கனமழை  பெய்து வருகிறது.இதன்படி நேற்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா உட்பட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்த மாவட்டங்களில் நேற்று காலை முதல் மிக பலத்த மழை பெய்தது.  திருவனந்தபுரம் கொல்லம், எர்ணாகுளம்  உள்ளிட்ட மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது, தாழ்வான பகுதிகளில் ெவள்ளம் உயர்ந்துள்ளது.

இதனால் ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் நிவாரண படையினர் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர். இன்றும் (15ம் தேதி) மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர்  மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் ரெட்  அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள  கடலோர பகுதிகளில் புயல் வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மறு அறிவிப்பு  வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை  எச்சரிக்கையை தொடர்ந்து திருவனந்தபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில்  சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  இந்த மாவட்டங்களில் பேரிடர் நிவாரணப்படையினர் தயாராக  நிறுத்தப்பட்டுள்ளனர். சிவப்பு எச்சரிக்ைக விடுக்கப்பட்டுள்ளதால்  திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் நேற்று கொரோனா  தடுப்பூசி போடப்பட வில்லை.

Related Stories: