திருமணத்தில் பங்கேற்ற கொரோனா நோயாளி

மங்களூரு: கர்நாடகா மாநிலம் தென்கனரா  மாவட்டம் மங்களூரு அருகே மணினல்கூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் பூஜாரிக்கு  கடந்த சில நாட்களாக இருமல் காய்ச்சல் இருந்தது. அவர் கொரோனா  பரிசோதனை செய்துகொண்டார்.  அதில் அவருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 13-ம் தேதி உறவினரின்  திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.

தகவல் அறிந்த பிடிஒ தலைமையிலான   குழு ராஜேஷ் பூஜாரியின் வீட்டிற்கு சென்று  விசாரித்த போது அவர்  கொரோனா நோயாளி என்று தெரியவந்தது. அதிகாரிகள் அவரிடம்  விசாரித்தபோது, ​​மங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை  செய்த போது நெகடிவ் வந்ததாகவும்,  தனிமைப்படுத்திக்கொள்ள முடியாது என்று  அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பி.டி.ஓ அதிகாரி அளித்த  புகாரின் அடிப்படையில் பண்ட்வால் போலீசார் ராஜேஷ் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது.

Related Stories: