மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை: டெல்லி போலீசில் பரபரப்பு புகார்

புதுடெல்லி: கொரோனா தீவிரமாக இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என டெல்லி போலீசில் புகார் தரப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணவில்லை என டெல்லி போலீஸ் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நாகேஷ் கரியப்பா ஆன்லைன் மூலமாக அனுப்பியுள்ள புகாரில், ‘மக்களை கவனிக்க வேண்டிய இந்த இக்கட்டான நேரத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  காணவில்லை’ என கூறி உள்ளார். இது குறித்து கரியப்பா கூறுகையில், ‘‘அரசியல்வாதிகள் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். சவாலான சூழ்நிலையில் ஓடக்கூடாது’’ என கூறி உள்ளார்.

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலின் போது பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தீவிரமாக பிரசாரம் செய்த அமித்ஷா, அதன் பின் வைரஸ் பரவல் தீவிரமடைந்த பிறகு அவர் பற்றி எந்த செய்திகளும் வெளியாகவில்லை. கொரோனா  முதல் அலையின் போதும் அவரது நடவடிக்கைகள் இதே போல் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: