சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்பொழுது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதாக இருந்தால் ஏ.டி.எம். இந்திரங்களைதான் நாட வேண்டி இருக்கிறது. வங்கியின் கோட்பாடுகளின்படி அதே வங்கி ஏ.டி.எம்மை பயன்படுத்தினால் பணம் பிடிக்கப்படாது. ஆனால் ஒருசில முறை வங்கியில் பணம் எடுத்தாலோ வங்கியின் இருப்பை பரிசோதித்தாலோ பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. மற்ற வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்தால் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.