×

தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 32 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை: தமிழகத்தில் நேற்று 31,892 பேருக்கு கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்டது. மேலும் நேற்று மட்டும் 20,037 பேர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.   சிகிச்சை பலனின்றி நேற்று  ஒரேநாளில்  288 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை 17,056 பேர்  உயிரிழந்துள்ளனர்.  

 சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் நேற்று 1,60,042 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் 31,892 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று  சென்னையில் மட்டும் 6,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து   பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,31,377 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 20,037 பேர் நேற்று குணமடைந்து வீடு  திரும்பினர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,18,982 ஆக   உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 288 பேர்  நேற்று உயிரிழந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , The daily impact in Tamil Nadu is close to 32 thousand
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...