பெண் காவலரிடம் சில்மிஷம் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

சென்னை: ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயற்சித்த உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 12ம் தேதி, மெரினா கடற்கரையில், தலைவர்கள் நினைவிடத்தில் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த ஆயுதப்படை பெண் காவலரை அண்ணா சதுக்கம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜ் தனது செல்போன் மூலம் தனியாக வரவழைத்து ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார். இதுதொடர்பாக பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், உதவி ஆய்வாளர் ராஜ் ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயற்சித்தது உண்மை என தெரியவந்ததால், காவல்துறையின் மாண்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்த உதவி ஆய்வாளர் ராஜ் நேற்று சரக உயரதிகாரி மூலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள விசாகா குழுவிற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: