போதிய வரவேற்பு இல்லாததால் சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து

சென்னை: போதிய வரவேற்பு இல்லாததால் 4 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: போதிய வரவேற்பு இல்லாததால் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை 4 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி சென்ட்ரல் - ஆழப்புழா (02639, 02640) இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.  மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் (06629, 06630), எர்ணாகுளம் - காரைக்கால் (06187, 06188) மற்றும் புனலூர் - மதுரை (06729, 06730) ஆகிய சிறப்பு ரயில்கள் வரும் 31ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

Related Stories: