ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,018 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக  மேலும், 96 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் இதுவரை மொத்தமாக  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  13,88,803-ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்புக்கு இதுவரைஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,173-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,177 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 11,75,843-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை   2 லட்சத்து 03 ஆயிரத்து 787- ஆக உள்ளது.

Related Stories: