சென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு நோயாளிகளை கொண்டு செல்ல கார் ஆம்புலன்ஸ்

சென்னை : கொரோனா சிகிச்சை மையங்களுக்கு நோயாளிகளை கொண்டு செல்ல கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது சென்னை மாநகராட்சி. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது. லேசான கொரோனா அறிகுறி கொண்டவர்கள் மருத்துவமனை அல்லது கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக சிறப்பு மருத்துவ ஊர்தியை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. ஆம்புலன்ஸ் வசதி கொண்ட 250 கார்களை சிறப்பு அவசர ஊர்தியாக பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 50 அவசர ஊர்திகளின் இயக்கம் தொடங்கியுள்ளது.

Related Stories: